Connect with us

News

ரஜினி மகள் வீட்டில் திருடியவர்களுக்கு 2 நாள் போலீஸ் காவல்.!

ரஜினி மகள் வீட்டில் திருடியவர்களுக்கு இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி.

சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த விலை உயர்ந்த நகைகள் மற்றும் ஆபரணங்கள் திருடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்த செய்தி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்த, வேலைக்காரப் பெண் ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, இவர்களுடன் கொள்ளையில் ஈடுபட்ட மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், அடிக்கடி பெரிய தொகை கொண்ட பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்தது.

மேலும், போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனராம். இப்போது வரைக்கும் சுமார் 20 சரவண் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில், தொடர் விசாரணை நடத்தியதில், ஐஸ்வர்யா வீட்டில் திருடி சென்னை ஓஎம்ஆரில் நிலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படிங்களேன் – பத்து தல படத்தை பார்த்து மிரண்டு போன சிம்பு.! முதல் விமர்சனம் இதோ.!

இந்நிலையில், ரஜினி மகள் வீட்டில் திருடிய ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியரை  2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் 3- நாள் கேட்ட நிலையில், சைதாப்பேட்டை  நீதிமன்றம்  இரண்டு நாட்கள் காவலில் வைக்க அனுமதி கொடுத்துள்ளது.

Continue Reading
To Top