News
அஜித் தொப்பையை காட்டிட்டு நடிப்பாரு…அவரு பெரிய பிராடு…பரபரப்பை கிளப்பிய கமல் பட தயாரிப்பாளர்.!!
நடிகர் அஜித் பற்றி அடிக்கடி சில தயாரிப்பாளர்கள் அவர் நல்ல மனிதர் என கூறுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் பற்றியும் அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா பற்றியும் மிகவும் மோசமாக பேசியுள்ளார்.

ajith kumar [Image Source : File Image ]
இது தொடர்பாக பேசிய மாணிக்கம் நாராயணன் “அஜித் நல்ல நடிகன். வாழ்க்கையில் நன்றாக நடிப்பார் சினிமாவில் தொந்தியை காட்டிவிட்டு நடிப்பார். அவருக்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். அஜித் மீது எனக்கு என்ன குற்றம் என்றால் அஜித் தினமும் மக்களை கவர்ந்து வருகிறார். ஆனால் முதலில் மனிதனாக வாழ வேண்டும் ஏனென்றால் என்னிடம் நீ பணம் வாங்கி உள்ளாய் என்றால் அதனை ஒற்றுக்கொள்ள வேண்டும்.

Manickam Narayanan about ajith kumar [Image Source : File Image ]
நான் பலமுறை சுரேஷ் சந்திராவிடம் இதைப் பற்றி பேசி இருக்கிறேன். அதற்கு அவர் அதற்கான ஆதாரங்களை கொடுங்கள் என கேட்கிறார். பிறகு தற்போது அதற்கான சேக் விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் அனைத்தையும் எடுத்து விட்டேன். ஆரம்ப காலகட்டத்தில் அஜித் என்னிடம் என்னுடைய அப்பா அம்மா ஊருக்கு செல்ல வேண்டும் என்று என்னிடம் ஒரு பணம் கேட்டான்.

Manickam Narayanan about ajith [Image Source : File Image ]
நான் அவன் கேட்டதும் யோசிக்காமல் பணத்தை கொடுத்தேன். பிறகு 50 வயதானால் கொடுத்த பணத்தை மறந்து விடுவார்களா என்ன..? 15 லட்சம் கிட்ட என்னிடம் அஜித் பணம் வாங்கியுள்ளார். ஆரம்ப காலத்தில் அவர் பணம் வாங்கியதற்கான விவரங்களை என்னால் தேடிப் பிடிக்க முடியவில்லை. இப்போது எடுத்து விட்டேன். ஒரு நல்ல மனிதனாக இருந்தால் என்ன சொல்ல வேண்டும்.

Manickam Narayanan About Suresh Chandra anan about ajith [Image Source : File Image ]
தனியாக அழித்து சார் எப்போது பணம் வாங்கினேன் எவ்வளவு வாங்கினேன் என்பதை பற்றி பேச வேண்டுமா இல்லையா அதை பற்றி பேசவே இல்லை. அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா எல்லாம் மிகப்பெரிய பிராடு அவனெல்லாம் ஒரு பி ஆர் ஓவா..? அவன் போய் அஜித் கிட்ட என்ன சொல்லுவான் என்றே தெரியாது. என்னுடைய மகன் கல்யாணத்திற்கு கூட பத்திரிக்கை வைப்பதற்காக சென்றேன் அதற்கே பிறகு வாருங்கள் என கூறினான்” என மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார். இவர் பேசியது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
