News
முதல் கணவருக்கு அல்வா! அடம் பிடித்து வாழ்க்கையை இழந்த நடிகை திவ்யா உன்னி?
மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டிப்பறந்தவர் நடிகை திவ்யா உன்னி. இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தை போலவே தமிழிலும் இவர் பெரிய ஆளாக வருவார் என பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

Divyaa Unni [Image Source : File Image ]
இந்நிலையில், இவரும் இரண்டு திருமணம் செய்துகொண்டுள்ளதாக பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” நடிகை திவ்யா உன்னி இரண்டு திருமணங்களை செய்துகொண்டவர். முதலில் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

Divyaa Unni [Image Source : File Image ]
திவ்யா உன்னி அந்த மருத்துவருடன் திருவனந்தபுரத்தில் நன்றாக தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். பிறகு வழக்கம் போல் தான் சினிமாவில் நடிக்கப்போறேன் என்று நடிகை திவ்யா உன்னி தனது கணவரிடம் பேசினாராம். அதற்கு அவருடைய கணவர் மறுத்தார். இதன் காரணமாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட திவ்யா உன்னி முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.

Divyaa Unni [Image Source : File Image ]
முதல் கணவர் வேண்டும் என அடம்பிடித்து திருமணம் செய்தார். பிறகு வாழ்க்கையை இழந்து வேதனை அடைந்தார். அதன்பிறகு திவ்யா உன்னி பொறியாளர் ஒருவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்போது அவருடன் தான் இருந்து வாழ்ந்து வருகிறார்” என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
