News
தனது 50-வது படத்தில் இரண்டு தோற்றத்தில் களமிறங்குகிறார் விஜய் சேதுபதி.!
கோலிவுட், பாலிவுட் என பிசியாகவே இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘விடுதலை’ படத்தில் இவர் மக்கள் இயக்கத்தின் தலைவராக நடித்திருப்பார்.
தற்போது, ‘குரங்கு பொம்மை’ திரைப்பட இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் அவர் தனது 50 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகர் நட்டியும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் சுதன் பேசுகையில், ‘விஜய் சேதுபதியின் 50-வது படம் எங்களுடையது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் படத்தில், விஜய் சேதுபதி இரண்டு தோற்றத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
85 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளோம், இதுவரை 50 நாட்கள் படப்பிடிப்பை சிறப்பாக முடிந்துவிட்டது. இன்னும் 10 நாட்களில் விஜய் சேதுபதியின் தனது பாகங்களை முடித்துவிடுவார் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
