Celebrities
ஆஸ்கர் எல்லாம் ஒரு விருதே கிடையாது…இயக்குனர் அமீர் ஆவேச பேச்சு.!
இயக்குனர் அமீர் சமீபத்தில் நடைபெற்ற ‘செங்களம்’ வெப் தொடரின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தார். இந்த விழா முடிந்து வெளிய வந்தவுடன் அவரிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் பல கேள்விகள் கேட்டனர். அதற்கும் அமீரும் தன்னுடைய பதில்களை அளித்தார்.

Ameer Sultan [Image Source: Twitter]
அப்போது செய்தியாளர் ஒருவர் ஆஸ்கர் விருதை பற்றி கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த அமீர் ” ஆஸ்கர் விருது கிடைத்து இந்தியாவிற்கே பெருமைதான். ஆனால், என்னைப்பொறுத்தவரை ஆஸ்கர் எல்லாம் பெரிய விருதே கிடையாது. எல்லோருக்கும் தெரிந்ததால் அது பெரிதாக பார்க்கப்படுகிறது.

Ameer Sultan [Image Source: Google
எல்லா விருதுகளிலும் அரசியல் இருக்கிறது. அதைப்போல ஆஸ்கர் விருத்திலும் கண்டிப்பாக அரசியல் இருக்கிறது. இருந்தாலும் அங்கீகாரத்தை வாழ்த்துவோம் RRR படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்று மிகவும் ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- ராக்கி பாய் என்னை துன்புறுத்தினாரா..? உண்மையை உடைத்த ‘கேஜிஃஎப்’ நாயகி.!

Ameer Sultan [Image Source: Twitter]
மேலும், நடந்து முடிந்த 95-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
