Connect with us

News

நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட்.! நீதிமன்றம் அதிரடி…

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021-ல் மகாபலிபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது நண்பரான வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் யாஷிகா ஆனந்த் உடன் இந்த காரில் பயணம் செய்த, மூவரில் அவரது  இரண்டு நண்பர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் தப்பினர்.

அப்போது, மகாபலிபுரம் போலீசார் 279 மற்றும் பிரிவு 304 ஏ (அலட்சியத்தால் மரணம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், யாஷிகா ஆனந்த் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக நடிகை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இத்தனை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, நடிகை யாஷிகா ஆனந்த் பூரணம் குணமடைந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது, மாமல்லபுரத்தில் கார் விபத்து வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 21ம் தேதி செங்கல்பட்டு ஆஜராக வேண்டி இருந்தது.  

இதையும் படிங்களேன் – பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்…சோகத்தில் ரசிகர்கள்.!

ஆனால், ஆஜராகாத நிலையில் நடிகை யாஷிகா ஆனந்திக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  இது தொடர்பாக  நீதிமன்றத்தில் 25-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்ய நேரிடும் என செங்கல்பட்டு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continue Reading
To Top